பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேர்முகத் தேர்வுக்கான அவசிய விதிகள் - Interview Rules

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேர்முகத் தேர்வுக்கான அவசிய விதிகள் - Interview Rules

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நேர்முகத்தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...

நேர்முகத் தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...

* சரியான நேரத்திற்கு நேர்காணல் அரங்கை அடைய, முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள்.

* தேவையான சான்றுகள், அடையாள அட்டைகள், அழைப்புக் கடிதங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

* நேர்காணல் அரங்கில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவசியமற்ற உடல்மொழிகளை காட்டாதீர்கள்.

* தேர்வு அறைக்குள் அழைக்கப்படும்போது, அனுமதி பெற்று உள்ளே நுழையுங்கள். முகத்தில் புன்னகை தவழட்டும்.

* தேர்வு அதிகாரி இருக்கையில் அமரச் சொன்ன பிறகு, நன்றி சொல்லி அமருங்கள்.

* பதிலளிக்கும்போது தலையைச் சொறிவது, தேவையின்றி தலையை ஆட்டுவது, கைகளை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது என்றிருக்காமல் நிமிர்ந்திருந்து, நேர்த்தியான பதில்களை கூறுங்கள். இதற்கான பயிற்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் கண்ணாடி முன்பே பேசிப் பழகலாம்.

* தேர்வு அதிகாரியின் முகம்பார்த்து பதில் கூறுங்கள். கண்கள் அவசியமற்ற இடத்தில் உழன்றுகொண்டிருக்க வேண்டாம். தரையையும் நோட்டமிட வேண்டாம். குனிய வேண்டிய அவசியமும் இல்லை.

* பதில்கள் மிகச்சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கட்டும்.

* கேள்விகள் புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை. அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது.

* முகத்தில் மலர்ச்சியும், பேச்சில் ஆர்வமும் தொனிக்க வேண்டும். குரலில் பணிவு தேவை. எரிச்சல், கோபம் தவிர்த்துவிடுங்கள்.

* தேர்வு எதிர்பார்த்த மாதிரி அமையாவிட்டால், அதிகாரியிடம் விவாதம் செய்ய வேண்டாம். உரிய மதிப்பளிக்கத் தவறாதீர்கள்.

இந்த வெற்றி விதிகள் உங்கள் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தரும் என்பதில் ஐயமில்லை!