குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்

 குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்

vitamins-required-for-children


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள். வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.


* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்

கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்

 கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்

hair-problem-control-natural-way


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கூந்தல் உதிர்வு, இளம்நரை, பொடுகு போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

* வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.

* ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.

* நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.

* தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரவேண்டும்.

* கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

* தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.

* நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.

* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.

* நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.

* முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.

* இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.

வேக வைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 வேக வைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வேக வைத்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வறுத்த உணவுகளை தான் விரும்புகின்றனர். இட்லியை கூட காலை உணவாக ஏற்றுக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது. ஆனால், இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது...

காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது. ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் ப்ரோக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.

எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். இது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.

பசலைக்கீரை மற்றும் ப்ரோக்கோலியை அவிக்கும் போது வைட்டமின் பி பாதுகாக்கப்படுகிறது. அவிக்கப்பட்ட ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.

கேரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதைவிட அவித்து சாப்பிடும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபோலிக் அமிலம் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.

ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை கையாளுங்கள்!!!

குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் உணவுகள்

 குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் உணவுகள்



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில குழந்தைகளுக்கு சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இதை ‘ஒவ்வாமை’ என்று சொல்கின்றனர். இந்த ஒவ்வாமையால் பல உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ என்ற சத்து சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பால் கொடுத்தால், அது குழந்தைக்கு செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாலுக்குப் பதிலாக பால் பவுடர், பிற உணவுகளைத் தரலாம். ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவு தர வேண்டும். சில குழந்தைகளுக்கு சில திட உணவுகள் ஒத்துக்கொள்ளாது. 5% குழந்தைகளுக்கு இப்படி அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு.


எந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும்?

நிலக்கடலை
சோயாபீன்ஸ்
கடுகு
சில கொட்டை வகைகள்
பால்
மீன்
முட்டை
சில தானிய வகைகள் - கோதுமை போன்றவை
எலுமிச்சை

மேற்சொன்ன உணவுகளில் உள்ள புரதமோ மற்ற பொருட்களோ அலர்ஜிக்கு காரணமாகலாம்.



அலர்ஜி வரும் அறிகுறிகள் என்ன?

வயிற்றுப்போக்கு
வாந்தி
வயிற்று வலி
மூச்சுத்திணறல்
மயக்கம்
தொண்டைப் பகுதியில் வீக்கம்
மூக்கிலிருந்து நீர் வழிதல்
தோல் சிவந்து போதல், தடிப்பு, அரிப்பு
நாக்கு, உதடு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல்
உடலெங்கும் குத்தும் உணர்வு
தலைச்சுற்றல்

தடுக்கும் முறைகள்

மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து முறையான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

தடுப்பு மருந்துகள், அலர்ஜி மருந்துகள் ஆகியன மருத்துவர் பரிந்துரைத்தால் அதை அவசியம் சாப்பிட வேண்டும்.

6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் 3-நாள் விதிமுறையைப் பின்பற்றுதல் நல்லது.

ஒரு உணவை சிறிதளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, குழந்தை அதை உண்ட பிறகு 3 நாள் வரை குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். அலர்ஜி ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொள்கிறது என அர்த்தம்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை எக்காலத்துக்கு எக்காரணத்துக்கும் குழந்தைகளுக்கு திரும்ப தர கூடாது.

பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைக்கும் இயற்கை வழிகள்

 பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைக்கும் இயற்கை வழிகள்

After-birth-the-natural-way-to-reduce-belly


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான இயற்கை வழிமுறைகள் உள்ளன.

பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல (reduce belly fat for mothers after birth) கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது. கொழுப்பைக் குறைப்பது எப்படி? அவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.


இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். வெறும் வயிற்றில் பழமா…. ஆம்… காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.



தொப்பையைக் குறைக்கும் எளியப் பயிற்சி (Exercise for Belly Fat)

பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

தொப்பையைக் (Belly Fat) குறைக்கும் எளிய வழிகள்

* வாரம் இருமுறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு, அதை குடிநீராக குடிக்கலாம்.

* பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லையென்றால் பசிக்கும் வரை காத்திருங்கள்.

* பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, ஐயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

* இனிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றை அவசியம் தவிர்க்கவும்.

* எந்த உணவைச் சாப்பிட்டாலும் உதடுகள் மூடி இருக்க வேண்டும். பற்கள் மட்டும் உணவை மெல்ல வேண்டும். மிக்ஸியில் ஜாரை மூடிதானே அரைப்போம். அதேதான்… உதடுகளை மூடி நன்கு மென்று சாப்பிடுங்கள். தொப்பை வரவே வராது.

* நன்கு மென்று கூழாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளவருக்கு, கொழுப்பும் சேராது. தொப்பையும் இருக்காது.