டிவி சீரியலால் தடுமாறும் பெண்களின் வாழ்க்கை

டிவி சீரியலால் தடுமாறும் பெண்களின் வாழ்க்கை
women-life-stumble-by-TV-tamil-serials

 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வீட்டுக்குள்ளே வந்து நம்மோடு உறவாடும் டி.வி., குடும்ப பெண்களின் நெஞ்சில் நிற்க வேண்டும் என்று எண்ணி, கண்ணீரை கடல் நீராக்கியது போதாதென ஒழுக்க சிதைவுகளுக்கும் பாலம் போட புறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்குக்காக வந்ததே பெரிய திரை என்னும் சினிமா திரைப்படம். நாளடைவில் பொழுது போக்கிலும் மக்களுக்கான நல்ல அறிவுரைகள் இருந்தன. சமுதாய புரட்சிகளும், நாட்டு நலன், மொழி வளர்ச்சி, குடும்ப நடைமுறை என்ற வட்டத்துக்குள் சினிமா சுழன்றது.

நாகரிக வளர்ச்சிக்குப் பிறகு அதன் போக்கு மாறியது. திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகரித்தன. தற்போது, திரைப்படத்தின் ஊடே ஆங்காங்கே ஆபாசங்களை இடைச்செருகி ஆர்ப்பாட்டங்களை விதைத்து வருகிறார்கள்.

திரைப்படங்களின் கதை இப்படி என்றால், சின்னத்திரையோ திரைப்படங்களை மிஞ்சிவிட்டன. இவை வீட்டுக்குள்ளே வந்து நம்மோடு உறவாடும் டி.வி., குடும்ப பெண்களின் நெஞ்சில் நிற்க வேண்டும் என்று எண்ணி, கண்ணீரை கடல் நீராக்கியது போதாதென ஒழுக்க சிதைவுகளுக்கும் பாலம் போட புறப்பட்டுள்ளது.

நல்ல சிந்தனைகளை விதைக்கும் நேரத்தில் அருவருப்பான காட்சிகளை இயக்குவதில் பல இயக்குனர்களும் ஒரே மாதிரி இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. முக்கியமாக கல்யாணமான ஒருவனை இன்னொருத்தி அடைந்தே தீருவேன் என்று சபதமிடுவதும், வேறு ஒருவன் மனைவியை மணமுடித்தே தீருவேன் என இன்னொருவன் முழக்கமிடுவதும் காட்சிகள்தோறும் கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றன. இதுதான் வில்லத்தனம் என்று எண்ணி எல்லோரும் தொடர்வது ஏற்புடையதா?

ஒன்றோடு நின்றால் பரவாயில்லை. எல்லா சேனல்களின் சீரியல்களுமே இப்படித்தான் இருக்கின்றன. காட்சிக்கு காட்சி குடும்பத்தை எப்படியெல்லாம் கெடுப்பது என்ற கருவை மெருகேற்றி தரப்படுவது சரியானதல்ல.

இத்தகைய போக்கால், தமிழர் தம் கலாசாரம் சிதைந்து போகாதா? பண்பாடு பண்படுமா? பாழ்ப்பட்டு போகாதா? ஏதோ ஒன்று என்றால் திருத்திக்கொள்ளலாம். தினமும் தொடர்கதையாக தொடர்ந்தால் நலமா? கற்பனைக்கு அளவுகோலே கிடையாதா? கண்ணியம் சிதைந்திட விடலாமா?

சீரியல்களில் தாங்கள் சமூகத்தில் நடப்பதை பிரதிபலிப்பதாக கூறி சமாளிக்க முடியாது. பெரிய திரையும், சின்னத் திரை சீரியல்களும் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் தேவை.



ஆபாசத்தை முடக்கி, அன்பை வளர்த்து, சிந்திக்கும் மனிதர்களுக்கு மேலும் சிந்தனையை ஊட்டி, ஒழுக்க சிதைவுகளுக்கு இடம் தரக்கூடாது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஒரே கண்ணோட்டத்தை விட்டு, கண்ணிய பாதையில் கதைகளை இயக்கினால் தமிழ் கலாசார, பண்பாட்டுக்கு சிதைவுகள் ஏற்படாது என்பதை உணர்ந்து சின்னத்திரை சிறப்புகள் பெறட்டும்.

மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள்

மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள்
Diet-for-brain-health

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.

காலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

மதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.

மாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்ெநட்டுகள் சாப்பிட வேண்டும். 

துலாசனம்(Tolasana) -அஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும்

துலாசனம்(Tolasana) -அஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும்
Tolasana-doing-method


              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது இந்த ஆசனம்.

பெயர் விளக்கம்: துலா என்றால் தராசு. இந்த ஆசனத்தில் தராசு போன்று உடலை வைத்துக் கொள்வதால் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: தரைவிரிப்பின் மேல் கால்களை நேராக நீட்டி உட்காரவும், கால்களை தொடையின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். அப்படி செய்யும் போது இடது கால் மேல் வரும்படி வைக்கவும். கைகள் இரண்டையும் நேராக்கி இரு தொடைகளுக்கு அருகில் வைக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியே விட்டு கைகளை உறுதியாக வைத்துக் கொண்டு உடலை தரையிலிருந்து மேலே தூக்கி நிறுத்தவும். முழங்கால்கள் சற்று மேல் நோக்கியபடி இருக்கட்டும். உடல் எடை இரு கைகளிலும் சமமாக இருக்கட்டும். பார்வை நேராக இருக்கட்டும்.

இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி சாதாரண மூச்சில் இருக்க முயலவும். பிறகு மூச்சை வெளியே விட்டு நிதானமாக உடலை கீழே இறக்கவும். கால்களை பிரித்து இரு கால்களையும் நீட்டி அமரவும். பிறகு வலதுகால் மேல் வரும்படி மாற்றி பத்மாசனம் செய்து மேல்கண்ட முறைப்படி மீண்டும் செய்யவும்.  இந்த ஆசனத்தை கால்களை மாற்றி 24 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: கைகள், வயிறு, உடலை சமநிலைப்படுத்துதல் மீதும் அனாசாதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிகுறிப்பு: உடலை தரையிலிருந்து மேலே தூக்கும் போது உள்ளங்கை, விரல்களை நன்றாக ஊன்றி வைத்து உடலை சமமாக மேலே தூக்க முயலவும். விரல்களை மட்டும் தரையில் ஊன்றி உடலை மேலே தூக்க முயலக் கூடாது.

தடைகுறிப்பு: மிக வலிமை குறைந்த கைகள் மற்றும் வயிற்றுத் தசைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள்: ஜீரண கருவிகள் நன்கு வேலை செய்யும். நுரையீரல்கள் வலுப்பெறும், கைகள், புஜங்கள், தோள்கள் மற்றும் வயிற்றுத் தசைகள் பலம் பெறும். அஜீரணம், மலச்சிக்கல், நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது. விரை வீக்கம் குறையும். உடலை சமநிலைப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும். 

பெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்

பெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்
pregnancy-women-like-Cesarean-reasons

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது… அவசியமானதும்கூட!

சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.’’

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?
What-happens-to-vitamin-D-deficiency

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாட்டால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்.

வெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் என்றால் எல்லோருக்கும் தெரியும் அது ‘வைட்டமின் டி’ என்று. எலும்பு உறுதி, மூட்டுவலி என எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மட்டும் அல்ல, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம்.

இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இதனால், உடலில் சேமித்துவைக்கப்பட்டு, தேவையானபோது பயன்படுத்தப்படும். மற்ற வைட்டமின்களைவிட ‘டி’ மிகவும் ஸ்பெஷலானது. இது ஒரு ப்ரோ ஹார்மோனாகவும் செயல்படுகிறது. பல்வேறு நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களில் வைட்டமின் டி குறைபாடும் ஒன்றாக இருக்குமா என உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

நம் உடலில் உள்ள எலும்புகளில் பல கோடி புது செல்கள் தினமும் அழிந்து,  புது செல்கள் பிறக்கின்றன. குழந்தைப் பருவத்தில், சிறியதாக இருக்கும் எலும்புகள், வயது அதிகரிக்கும்போது பெரிதாகிறது. எலும்பின் இந்த வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியத்தை எலும்புகள் கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி இல்லை என்றால், கால்சியம் கிரகிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், எலும்புகள் பலவீனம் அடையும். வைட்டமின் டி உடலில் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து அதிக அளவிலும், சில வகை உணவில் இருந்து சிறிதளவும் கிடைக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து கிடைக்காததால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், எலும்பு முறையற்ற வகையில் வளரும். சில இடங்களில், விநோதமாக நீட்டிக்கொண்டும், சில இடங்களில் சுருங்கியும் காணப்படலாம்.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் இந்த நோய்க்கு ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர்.

பெரியவர்களுக்கு, எலும்புகள் முறையில்லாமல் வளரும் நோயான ஆஸ்டியோமலேசியா, எலும்பு அடர்த்திக் குறைதல் நோயான ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய்கள் வரும். எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் வர வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.



ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும் ஹார்மோன் இன்சுலின். இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால், இன்சுலின் சுரப்பில் பிரச்சனை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்
pimples-in-head-reasons


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

சருமத்துளைகள் : பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

பொடுகு : தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட நெற்றியில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் நெற்றியில் பருக்கள் தோன்றுகிறது.

தலைமுடி : தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.

ஜீரணக்கோளாறு : நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

மன அழுத்தம் : ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஷாம்பு : ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

தவிர்க்க : இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

அரோமா ஆயில் - சருமத்தை மெருகேற்றும்

அரோமா ஆயில் - சருமத்தை மெருகேற்றும்
aroma-oil-for-skin

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில். அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ‘‘சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!’’. அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிகள் இதோ!

க்ளென்சிங் கவர்ச்சி!

தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.

பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

நீராவி பியூட்டி!

எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.

பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.

வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.

பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.

சரும அடுக்குகளில் ஊடுருவும் ஆயில்!

பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.

பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

மத்ஸ்யாசனம் - சுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்

 மத்ஸ்யாசனம் - சுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்
matsyasana-doing-method

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் 

நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

பெயர் விளக்கம்: ‘மத்ஸ்ய’ என்றால் மீன் என்று பொருள். சற்று வளைந்த நிலையில் மீன் போன்று இந்த ஆசனம் தோற்றமளிப்பதால் இந்த ஆசனம் மத்ஸ்யாசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: தரைவிரிப்பின் மேல் கால்களை நீட்டி அமரவும். கால்களை தொடையின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். அப்படி செய்யும் போது இடது கால் மேல் வரும்படி இருக்கட்டும். இந்த நிலைக்கு பத்மாசனம் என்று பெயர். தொடைகளின் அடிப்பகுதியில் உள்ளங்கைகளை வைத்து ஒவ்வொரு முழங்கைகளாக தரையில் ஊன்றி தலையின் பின் பகுதியும், முதுகையும் தரைவிரிப்பின் மேல் வைத்து மல்லாந்து படுக்கவும்.

இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் சிறிது நேரம் இருக்கவும். மூச்சை வெளியே விட்டு தொடைகளின் அடிப்பகுதியை உள்ளங்கைகளால் பலமாக பிடித்து முழங்கைகளை தரையில் ஊன்றி உடல் எடையை கைகளில் தாங்கிக் கொண்டு முதுகை தரையிலிருந்து மேலே உயர்த்தவும். அதே சமயம் தலையை பின்னுக்கு வளைக்கவும்.

முதுகை நன்றாக வில் போல் வளைத்து தலையின் மையப் பகுதியை தரையில் பதிக்கவும். தலையை, சரியாக தரையில் பதித்த பிறகு கைகளை எடுத்து இரண்டு கால் விரல்களையும் இரண்டு கைவிரல்களால் பிடித்துக் கொள்ளவும். கண்களை மூடவும்.

இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் 1 நிமிடம் வரை மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை இழுத்து விடவும், பிறகு மூச்சை வெளியே விட்டு உள்ளங்கைகளை தொடையின் அடியில் சேர்த்து வைத்து முதுகை கீழே இறக்கி தலையை நேராக வைத்துப் படுத்து கைகளால் உடல் எடையை தாங்கி உட்காரும் நிலைக்கு வரவும். பத்மாசனத்தைக் கலைத்து கால்களை நீட்டி வைக்கவும்,  பிறகு வலது கால் மேல் வரும்படி பத்மாசனம் செய்து மேற்கண்ட முறைப்படி மீண்டும் செய்யவும்.

இரண்டு கால்களையும் மாற்றிச் செய்யும் காலஅளவு சமமாக இருக்கட்டும். சர்வாங்காசனம் செய்த பிறகு இந்த ஆசனத்தை அவசியம் செய்ய வேண்டும். சர்வாங்காசனத்தில் நிலைத்திருந்த கால அளவில் மூன்றில் ஒரு பங்கு கால அளவு இந்த ஆசனத்தை செய்யவும். அதாவது சர்வாங்காசனம் 3 நிமிடம் செய்தால் மத்யாசனம் 1 நிமிடம் செய்யவும். அதையும் இரு கால்களையும் மாற்றி அரை அரை நிமிடமாக செய்யவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, மார்பு, கழுத்து, முதுகு, அல்லது மூச்சின் மீதும், மணிபூர, அனாஹ அல்லது விசுத்திச் சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சி குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் உட்கார்ந்த நிலையில் பத்மாசனம் செய்து படுத்து மத்ஸ்யாசனம் செய்ய முடியாதவர்கள் மல்லாந்து படுத்த நிலையில் பத்மாசனம் செய்து மத்ஸ்யாசனம் செய்யலாம். பத்மாசனமே செய்ய முடியாதவர்கள் உட்கார்ந்து அருகில் வைத்தும் மத்ஸ்யாசனம் செய்யலாம். அல்லது கால்கள் இரண்டையும் நீட்டி வைத்தும் செய்யலாம்.

தடைக்குறிப்பு: இருதய நோய், வயிற்றுப்புண் குடற்பிதுக்கம் ஆனவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பயன்கள்: நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் இந்த ஆசனம் நன்மை அளிக்கிறது. தொண்டையில் சதை வளர்ச்சி, இருமல் சளி நீங்கும். ரத்தம் சுத்தமாகும். கழுத்து வலி, முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும். முதுகெலும்பு, கழுத்து இடுப்பு பலம் பெறும். நுரையீரல்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

தைராய்டு, பாரா தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பி நன்கு இயங்க ஊக்குவிக்கும். கூனல் முதுகு சரியாகும். மூலநோயின் வேகம் குறையும். மூச்சின் இயக்கம் இயல்பான நிலையில் இருக்கச் செய்கிறது. தொண்டை வலி நீங்கும். குரல் வளம் அதிகரிக்கும். இளமை மேலிடும். உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில் - சரும வறட்சி - முதுமையை தடுக்கும்

ஆலிவ் ஆயில் - சரும வறட்சி - முதுமையை தடுக்கும்
olive-oil-for-skin-care

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

 ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சருமபராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.

* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

* உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்

பெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்
buttocks-exercise-for-women-at-home.

உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

 உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

ஸ்டேப்-அப்ஸ் : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

லாஞ்சஸ் : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.

கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.

திருமணம்: பெண்களின் மாறி வரும் மனோபாவம்

திருமணம்: பெண்களின் மாறி வரும் மனோபாவம்
marriage-women-condition

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருக்கிறது. அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும்.

“எனது பெற்றோர் வசதி படைத்தவர்கள். நான் அவர்களுக்கு ஒரே மகள். கணக்கு பார்க்காமல் காசை வாரியடித்து எனக்கு ஊரே வியக்கும் அளவுக்கு திருமணம் செய்துவைக்க என் அப்பா திட்டம் போட்டுவைத்திருக்கிறார். நான் அவரிடம், ‘அப்பா.. ஐந்தாயிரம் பேரை திரட்டப்போகிறீர்கள். எல்லோரும் கஷ்டப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் குவியப் போகிறார்கள்.

எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் முன்னால் ஏன் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தவேண்டும். தேவையில்லாமல் நமது உறவினர்களையும், உங்கள் நண்பர்களையும் அலையவைக்காதீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைய வேண்டிய சிம்பிளான விஷயம். எனது மனதுக்கு பிடித்தவரோடு நான் இணைந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். அதற்கு கூட்டம்.. கொண்டாட்டம்.. லட்சங்களில் பணச்செலவு போன்றவைகள் எல்லாம் தேவையில்லை’ என்று என் தந்தையிடம் சொல்லப்போகிறேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மையை நான் அவரிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்” என்று, திருமணம் பற்றி நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அதிரடியாய் கருத்து தெரிவித்திருக்கிறார், இளம் பெண் ஒருவர். அவர் வயது 25. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள பெண்களிடம், ‘மாறி வரும் திருமண விருப்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள், அடிப்படையையே புரட்டிப்போடும் அளவுக்கு அதிரடியாய் அமைந்திருக்கிறது.

‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, அது ‘தவறு’ என்று சொன்னவர்கள் 48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட அதே சதவீதத்தினர் அது ‘தவறில்லை’ என்று சொல்லும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களும், ‘எதிர்காலத்தில் ஒருவேளை அதுதான் சரி என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சர்வே, ‘பெண்களின் மனநிலை மாற்றத்தை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் எங்கோ போய்விட்டன. சமூகம் இன்னும் பழைய நினைப்பில் இங்கேயே நின்று கொண்டிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறது.

எப்படி என்றால், ‘அம்மாவைப்போல் நானும் அதிகாலையிலே விழித்து கோலம்போடுவேன். அவரிடமிருந்து மீன்குழம்பும், சாம்பாரும் தயாரிக்க கற்றுக்கொண்டு, நீண்ட கூந்தலையும் பராமரிப்பேன். வெளியாட்கள் யாராவது வந்தால் வீட்டுக்குள் போய் முடங்கிக்கொள்வேன்.. என்ற கோணத்தில்தான் என் குடும்பம் என்னை கணித்துவைத்திருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உள்ள பெண்களாக எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சில நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கு தக்கபடி கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது உண்மையான சிந்தனையையும், செயல்பாட்டையும் அவர்கள் இனியாவது சரியாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும்’ என்று சர்வேயில் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

‘உங்கள் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, பெண்கள் அளித்திருக்கும் பதில் யோசிக்கவைக்கிறது.

‘மத ஆச்சாரங்களின்படி ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கவேண்டு்ம். தகுதிக்கு மீறி அழைப்பிதழ்கள் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் வினியோகித்து, 500 பேர் கூட உட்காரமுடியாத இடத்தில் 5 ஆயிரம் பேரை அழைத்து கணக்கற்ற உணவுப் பொருட்களை வைத்து, யாரும் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இப்போது நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இதைத்தான் பல்வேறு திருமணங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சிரமத்தை எங்கள் திருமணத்தில் யாரும் அனுபவித்து விடக்கூடாது. அமைதியாக, மகிழ்ச்சியாக எங்கள் திருமணம் நடக்கவேண்டும்’ என்று 65 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

காதல் திருமண ஆர்வமும் பெண்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், ‘உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள உங்கள் பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர், ‘என்ன ஆனாலும் காதலித்தவரை கைவிடமாட்டோம்’ என்று கூறி யிருக்கிறார்கள். 30 சதவீதம் பேர், ‘காதலரைவிட பெற்றோர் முக்கியம். அவர்களது எண்ணங் களுக்கு மரியாதை கொடுப்போம்’ என்று நெகிழவைத்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர், ‘காதலுக்கு எதிர்ப்பு வந்தால் திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவோம்’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்கள்.

‘நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணின் வயது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, ‘ஆணுக்கு, எங்களைவிட ஐந்து வயது வரை கூடுதலாக இருக்கலாம்’ என்று 75 சதவீத பெண்களும், ‘ஐந்து வயதுக்கு மேல் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை’ என்று 7 சதவீத பெண்களும், ‘சமவயது இருந்தால் போதும்’ என்று 9 சதவீத பெண்களும், அதே சதவீதத்தினர் ‘ஆணுக்கு எங்களைவிட வயது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜோதிட பொருத்தங்கள் பார்க்கும் விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 52 சதவீதம் பேர் கூறியிருக் கிறார்கள். ஓரளவு நம்புவதாக 37 சதவீதம் பேரும், முழுமையாக நம்புவதாக 11 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.

இந்த சர்வே முடிவுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருப்பது உண்மைதான். அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும். ஆர்ப்பாட்டமான திருமணங்களும், அடுத்த சில மாதங்களிலே நடக்கும் விவாகரத்துக்களும் பெண்களின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் வெளிப்பாட்டை சர்வேக்களில் காண முடிகிறது” என்கிறார்கள்.

கலாசாரம் முக்கியம்! அது காப்பாற்றப்படவேண்டியது அவசியம்! 

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சரும பொலிவிற்கு வேண்டியவை

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சரும பொலிவிற்கு  வேண்டியவை
bridal-women-beauty-tips


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சில மாதங்களுக்கு முன்பாகவே உணவு பழக்க வழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதுவும் சரும பொலிவை மெருகேற்ற உதவும்.

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் மண நாள் நெருங்கும் வேளையில் அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாகவே உணவு பழக்க வழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதுவும் சரும பொலிவை மெருகேற்ற உதவும்.

முக்கியமாக கார உணவுகள், தேநீர், காபி, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வருவது சருமத்தை மெருகேற்ற உதவும். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இது உடல் பருமன், முகப்பரு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முல்தானி மெட்டி, உலர்ந்த ஆரஞ்சு தோல், சந்தன தூள் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம். பன்னீருடன் தேயிலை டிகாஷனை சிறிதளவு கலந்து முகத்தில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவுவதும் நல்லது. வறண்ட சருமம் கொண்டவர்கள் 2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பொடித்த பாதாம் மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து மசாஜ் செய்து, நீரில் கழுவி வரலாம். 

பாலூட்டும் தாய்மார்கள் மது குடிப்பதை தவிப்பது நல்லது

பாலூட்டும் தாய்மார்கள் மது குடிப்பதை தவிப்பது நல்லது
Breastfeeding-mothers-avoid-smoking-and-drinking-alcohol


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.

குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவர்களது குழந்தைகளை தான் பாதிக்கும் என ஆய்வின் முடிவு ஒன்று கூறுகிறது.

அமெரிக்கன் அகெடமி ஆம் பீடியாட்ரிக்ஸ் நடத்திய இந்த ஆய்வில் பாலூட்டும் தாய்மார்கள் புகைப்பிடித்தால் அது அவர்களின் குழந்தைகளின் அறிவாற்றல் திறமைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் தாய்மை அடைந்த பிறகு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதில்லை., எனினும் புகைபிடிக்கும் பெண்கள் தாய்மை அடைவர் என்பது யதார்த்தம் தானே!..

பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.

புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
ladies-driving-safety


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மெஷின்கள் மற்றும் வாகனங்களைக் கையாளும்போது, பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடி மற்றும் ஆடை மீது கண் இருக்கட்டும்.

திரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில் புயல்தான் வீசும். அதனால், சுடிதார் துப்பட்டாவின் இரண்டு நுனிகளையும் சேர்த்து முடிச்சுப்போட்டு வண்டி ஓட்டுவதுதான், பெண்களுக்கும் பாதுகாப்பு.

புடவை முந்தானை அல்லது துப்பட்டா மட்டுமின்றி, தரையில் புரள்வது போன்ற நீளமான ஆடைகளும் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதுபோன்ற ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, வண்டிகளில் 'சாரி கார்டு' இருப்பதுதான் முதல் பாதுகாப்பு வழி. உங்கள் ஆடை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால், அப்படியே சாலையில் விழும் நிலை உண்டாகும். எலும்பு முறிவு, ஹெல்மெட் போடவில்லையென்றால் தலையில் அடிபடுவது, பின்னால் வேகமாக வரும் வண்டியினால் ஏற்படும் விளைவு என ஆபத்தின் நீளம் பெரியது.

கழுத்தைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும்போது, துப்பட்டா சக்கரத்தில் மாட்டி இழுபட்டால், கழுத்து எலும்பும் முறிந்துவிடும். உயிருக்கும் பெரும் ஆபத்தாக மாறலாம். திக்கானத் துணியில் துப்பட்டா போட்டுக்கொண்டிருந்தால், அது வண்டி சக்கரத்தில் மாட்டும்போது, காத்தாடி நூல் எப்படி கழுத்தை அறுக்குமோ அதுபோன்று நிகழ்ந்துவிடும். புடவை முந்தானை வண்டிச் சக்கரத்தில் சிக்கினால், அது என்ன மாதிரியான சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதுதவிர, லிஃப்டில் ஏறும்போதும், காரில் ஏறும்போதும்கூட துப்பட்டா அல்லது முந்தானை கதவில் சிக்கியுள்ளதா என்பதைக் கவனியுங்கள்''

'ஓரளவுக்கு நீளமான தலைமுடி இருக்கும் பெண்கள், பெடஸ்டல் ஃபேனில் முடியைக் காயவைக்கும்போதும், ஃபேன் அருகில் முடியை விரித்துப்போட்டு வேறு வேலையாக நின்றிருக்கும்போதும் கவனமாக இருக்கவும். கண்மூடித் திறக்கும் நேரத்தில் காற்றின் இழுவிசை வேகத்தில், தலைமுடி ஃபேனுக்குள் சிக்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஃபேனுக்குள் இருக்கும் பிளேடுகள் பெரும்பாலும், தடிமனான இரும்பால் செய்யப்பட்டிருக்கும். ஃபேனும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால், தலைமுடியானது ஸ்கால்ப்புடன் பிய்ந்துவிடும்.

குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?

குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?
How-many-breastfeeding-baby

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.

பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.

குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும். 

சர்வாங்காசனம் - ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு

 சர்வாங்காசனம் - ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு
sarvangasana

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது இந்த சர்வாங்காசனம். லவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. இந்த இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள். இந்த ஆசன பயிற்சியில் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் தைராய்டு, பாரா தைராய்டு, பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் எல்லா உறுப்புகளும்  பயன்பெறுகின்றன என்பதனால் இந்த ஆசனம் சர்வாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: சவாசனத்தில் படுத்து, கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகள் இரண்டும் உடலோடு ஒட்டியபடி நீட்டி வைக்கவும். உள்ளங்கைகளும் தரையோடு படிந்திருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை மடித்து வயிற்றுப் பகுதியை முழங்கால்கள் தொடும்படி கொண்டு போய் முதுகை தரையிலிருந்து தூக்கி

கால்களை உயர்த்தவும். அதே நேரத்தில் முழங்கைகளை தரைவிரிப்பில் நன்றாக ஊன்றி பிருஷ்ட பாகத்தை இரு உள்ளங்கை களாலும் தாங்கிப் பிடித்து முழங்கால்களை மேலே உயர்த்தி கால்களை நேராக நிமிர்த்தவும். கால்களை உயர உயர  பிருஷ்டபாகத்திலிருந்து கைகளை கீழே கொண்டு போய் மார்பு கூட்டுக்குப் பின்புறம் உள்ளங்கைகளை நிறுத்தி உடல் எடை இரு கைகளிலும் சமமாக இருக்கும்படி தாங்கிக் கொள்ளவும்.

கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் தளர்ந்த நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். தாடைப்பாகம் நெஞ்சில் பதியட்டும். 3 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும் ஆரம்பப் பயிற்சியில் முடிந்த அளவு காலம் (சில வினாடிகள்)  பயிற்சி செய்யவும். பிறகு கால்களை மடக்கி கைகளால் பிருஷ்டபாகத்தை வழுக்கி கீழே இறக்கி கைகளையும், கால்களையும் நேராக நீட்டி வைத்து சவாசன நிலைக்கு செல்லவும்.
உடலில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்து வரவும்.

உடலை கைகளால் தாங்காமலேயே மேலே தூக்கக் கூடிய அளவு பயிற்சியில் முன்னேற்றம் அடையும்போது கால் முட்டிகளை மடக்காமல் தலைக்குப் பின்னால் கால்களை கொண்டுபோய், கால்களை மேலே உயர்த்தி சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பயிற்சியை முடிக்கும் போதும் கால்களை மடக்காமல் கீழே இறக்க வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை, கழுத்து மற்றும் உடல் எடையை சமமாக இரு தோள்களிலும் தாங்கச் செய்வதின் மீதும், உடலை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக்குறிப்பு: உடலை கீழே இறக்கும் போது தலையை தரைவிரிப்பிலிருந்து மேலே தூக்காமல் முதுகை கீழே இறக்கி கால்களை கீழே இறக்கவும்.

தடைக்குறிப்பு: கல்லீரல், மண்ணீரல் மற்றும் கண்டச்சுரப்பி வீக்கம் கழுத்து நரம்புக் கோளாறு, கழுத்தில் அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு மிக பல உஷ்ணமான ரத்த நாளமுள்ள கண்கள், இடம் பெயர்ந்த டிஸ்க், உடலில் மிக அசுத்தமான ரத்தம் போன்ற எந்தவிதமான குறைபாடுகள் இருந்தாலும் சர்வாங்காசனம் செய்யக்கூடாது.



பயன்கள்: சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து போன்று உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது. அச்சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குகிறது. மற்றும் தைமஸ் சுரப்பி செயல்படத் தூண்டுகிறது. பலவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். குரல் வளம் சிறப்பாக அமையும். சளி, இருமல், நரம்பு பலகீனம், மார்புவலி, தொண்டை வலி, தொண்டை  சதை வளர்ச்சி, தலைவலி, அண்டவாயு நீங்க உதவுகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது.